tamilnadu

உலகச் செய்திகள்

பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஜனவரி 4 ஆம் தேதி யன்று, 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இளம் பருவத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இல்லை. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்ட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் போதிய அளவு ஊழியர்கள் இல்லை. சிகிச்சை தர மருத்துவர்கள் இல்லை. பிரிட்டனோடு, வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிலைதான் உள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது பற்றி மூன்று நாட்கள் விவாதம் நடத்திய பிறகு, பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அனுமதிச்சீட்டு க்கு ஆதரவாக 214 வாக்குகளும், எதிராக 93 வாக்கு கள் விழுந்தன. 27 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. தேசிய அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள் ளது. அடுத்ததாக, செனட்டில் ஒப்புதல் பெற வேண்டும்.

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மத்தியில் கொரோனா தொற்று அதிகமாகி வரு கிறது. இதனால் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜப்பா னின் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமசா ஹயாசி கோரியுள்ளார். ஜப்பானின் தென் பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் உள்ள அமெரிக்க ராணு வத்தினருக்கு தொற்று கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனி பிளிக் கெனுக்கு யோஷிமசா ஹயாசி கடிதம் எழுதியுள்ளார்.