கர்நாடகா மாநிலம் வியாஸ்நகரே ரயில் நிலையம் அருகே டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிவிட்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. சேதம டைந்த நிலையில் நின்றிருந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு டிப்பர் லாரி ஒன்று அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கோணி பஸப்பா (65) கஞ்சம்மா (80), பாக்கி யம்மா (30), யுவராஜ் (5), பீமலிங்கப்பா (50), உமா (45), அனில் (30) ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். காரில் பயணித்த 2 வயது சிறுவன் மட்டும் படுகாயங்களு டன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரு கில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.