tamilnadu

img

ஆண்டுதோறும் 42 லட்சம் பேருக்கு எச்ஐவி பரிசோதனை: அமைச்சர்

செங்கல்பட்டு ,ஜூன் 8- தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 30 லட்சம் பொது மக்களுக்கும், 12 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கும் எய்ட்ஸ் பரி சோதனை இலவசமாக செய்யப் படுவதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளத்தில்  கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை புதனன்று (ஜூன் 8) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி யில், “இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் முதல் முறையாக 1986 ஆம் ஆண்டு எய்ட்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்  1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தொடங்கப்பட்டது” என்றார். 2010 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியின் தீவிர முயற்சியால், எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கடைக்கோடி மக்க ளுக்கு சென்றடைய செய்து, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை எய்ட்ஸ் நோயைக் கண்டறிய பரி சோதனை மையங்கள் ஏற்படுத்தப் பட்டு படிப்படியாக எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே எய்ட்ஸ நோய் குறைந்த மாநிலமாக இன்று தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த ஆய்வின்படி 0.24 விழுக்காடு உள்ளது. இந்த நிலை தமிழகத்தில் 0.18 விழுக்காடாக குறைந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அவ்வப்போது ஏற்படும் உபாதைகள் எய்ட்ஸ் நோய் கிருமி அளவு பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பரிசோதனை போன்ற சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர்  ஹரிஹரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,  கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் மரு.அண்ணாமலை மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.