கொடைக்கானல், ஆக.14- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்பாக கொடைக் கானல் மலைப்பகுதியிலுள்ள வடகரைப்பாறை ஊரில் உலகத் தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமையேற்ற காந்திகிராமியப் பல்கலைகழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரி யர் ஒ.முத்தையா பேசியதாவது: “இந்தியாவின் வரலாறு பழங்கு டிகளிடமிருந்தே எழுதப்பட வேண்டும். இசை, பண்பாடு முத லான எல்லாவற்றிலும் தனித்த அடையாளங்களுடன் இந்தியா முழுக்க 37 பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. பழங்குடிகளின் பாரம்பரிய அறி வைப் போற்றிப் பாதுகாப்பதுடன் அதைப் பரவச்செய்வது நமது கடமையாகும்” என்றார். மதுரைத் தியாகராசர் கல்லூரி யின் உதவிப் பேராசிரியர் ரே. கோவிந்தராஜ் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றார். அவர் “கல்வி யால் மட்டுமே ஒரு இனம் தலை நிமிரும். ஜவ்வாது மலையில் வாழும் மலையாளிப் பழங்குடி இனத்தில் பிறந்த நான் இன்றை க்குப் பேராசிரியராக உயர்ந்திருப்ப தற்கும் கல்வியே காரணம். பழங்குடிகள் எந்தக் காரணத்தி னாலும் கல்வியைக் கைவிடக் கூடாது” என்றார். விழாவில் பழங்குடியின மாணவர்களுக்குத் திருக்குறள் ஒப்பித்தல், ஆடல், பாடல் முதலான போட்டிகள் நடத்திப் பரிசு கள் வழங்கப்பட்டன. பளியர் இனத்தைச் சேர்ந்த இசைக் கலை ஞர்கள் பாரம்பரிய இசைக் கருவி களை இசைத்தனர். ஊர் மக்கள், பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கள், முதுகலை மாணவர்கள் முத லானோர் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் சி.சிதம் பரம் வரவேற்றார். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் கி.சிவா நன்றி கூறினார்.