tamilnadu

வாடகை வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

மதுரை, மே 27- கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும்.  சாலை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். கடன்  தவனைத் தொகையை செலுத்த வட்டியில்லா கால அவகாசம் வழங்கவேண்டும். வாகனத்தைஇயக்க முடியாத காலத்திற்கு  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும். சீட் பெர்மிட் வழங்க வேண்டுமென வலியு றுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை வாடகை  வாகன ஓட்டுநர்மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை மனு  அளித்தனர். மனுவில் மதுரை மாவட்டத்தில் மட்டும்  சுமார் ஒரு லட்சம் ஓட்டுநர்கள் உள்ளனர். தொழிலா ளர் நல வாரியத்தில் பதியப்பட்ட ஓட்டுனர்களுக்கு மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிவாரணம்  வழங்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

;