அறந்தாங்கி ‘திசைகள்’ சார்பில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு, இந்திய மருத்துவ கழகம், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திசைகள் அமைப்பு தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார். மருத்துவர் மதிவதனி, பேராசிரியர் சண்முகப்பிரியா, ஆசிரியர் சண்முகப்பிரியா, கவின் பாரதி, கப்பார்கான், வழக்கறிஞர் அலாவுதீன், முனைவர் முபாரக் அலி. நல்லாசிரியர் பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டு உரையாற்றினர். முன்னதாக தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி வரவேற்றார். செயலாளர் ஆன்டோ பிரவின் நன்றி கூறினார்.
கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு
தஞ்சாவூர் யாகப்பா நகர் பகுதியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் வடக்குத் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் அரவிந்தன்(26). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த ஏப்.3 ஆம் தேதி யாகப்பா நகர் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டூடியோவிற்கு வந்தார். அங்கு தனது பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அதனைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தன், இதுகுறித்து தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் சத்யநாதன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.