tamilnadu

img

குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை

சென்னை, ஏப்.1- குடும்பங்களுக்கு ரூ.100 கோடியில் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழ மையன்று (ஏப்.1) தகவல் தொழில்நுட்பவி யல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை  தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய பிறகு, அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ.20 கோடியில் சோழிங்கநல்லூரில் உலகத்தரத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப் படும். ரூ.40 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை பசுமை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு நலத் திட்டப் பயனாளிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத் தளம் உருவாக்கப்படும். ரூ. 11 கோடியில் தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் உருவாக்கப்படும். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும். ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகளை இ-சேவை கள் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும். ரூ.184 கோடியில் 20,000 அரசு அலுவலகங்கள் & நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும். ரூ.100 கோடியில் மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும். தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்- 2ம் கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம்  விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத்  துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக் கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியுள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.