tamilnadu

108 ஆம்புலன்ஸ்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 27 - சாலை விபத்தில் சிக்கிய வர்களை 108 ஆம்புலன்ஸ் ்கள், தனியார் மருத்துமவ மனைகளுக்கு  கொண்டு செல்வது தொடர்பான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளளது. மோட்டார் வாகன விபத் ்தில் போலி காப்பீடு கோரிய விவகாரத்தை விசாரிக்க 2021ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வு குழுவை  சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசார ணைக்கு வந்தது. இதில், ஆஜரான வழக்கறிஞர் விஜயராகவன், சாலை விபத்துகளில் சிக்கு பவர்களை 108 ஆம்புலன்ஸ் ்கள் ்மூலம் அரசு மருத்து வமனைகளுக்கு கொண்டு செல்லவேண்டும்மாறாக, தனியார் மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதுகுறித்தும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து, ஏப்ரல் 4ம் தேதிக் ்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தர விட்டார்.