“வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்-அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
என்று பெருமிதத்தோடு சுதந்திர வேட்கை யின் மிகுதியால் பாடினான் பாரதி. அந்தக் கனவை நனவாக்கும் வகையில் வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக அவர்களின் கொட்டத்தை அடக்கு வதற்கு வணிக வாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற மதிநுட்பத்தோடு பெரும் துன்பங்களை சுமந்து சுதேசிக் கப்பல்களை இயக்கி கப்பலோட்டிய தமிழனாக உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் வாழ்ந்து வருகிறார் வ.உ.சிதம்பரம். இன்றைய மதுரா கோட்ஸ் நூற்பாலை ஹார்வி மில்லாக இருந்த பொழுது அங்கு பணி யாற்றிய தொழிலாளர்களின் நலனுக்காக வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்திய தொழிற்சங்க தலைவர் வ.உ.சி. ஒட்டுமொத்தமாக தன் குடும்பத்தை மறந்து தனது சொத்துக் களை யெல்லாம் இழந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னிகரற்றத் தலைவராக நமது வணக்கத்துக் குரியவராக இன்றளவும் போற்றப்படுபவர் வஉசி. தற்போது தமிழக அரசு அவரது 150-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த நேரத்தில் வ.உ.சி யின் மகள் வழி மகளின் வாரிசு மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தமிழக முத லமைச்சரை சந்திக்க காத்திருக்கிறார்கள். கோரிக்கைகளை வைத்தே தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையிலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் வழியில் இவர்களும் உள்ளார்கள்.
கொள்ளுப்பேரன் சு.நெல்லையப்பன்
வ.உ.சிதம்பரனாரின் ஐந்தாவது மகள் சி.ஆனந்தவள்ளி-வள்ளிநாயகம் தம்பதியரின் மகள் சேதுலெட்சுமி. சேதுலெட்சுமி-சூரியநாரா யணன் தம்பதியரின் மகன் நெல்லையப்பன்(60) மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர். வ.உ.சியின் வாரிசுகள் நெல்லை, தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். நெல்லையப்பன் தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சிக் காலத்தில் சிறப்பு அரசாணை மூலம் இந்த அரசுப்பணி வாய்ப்பு வ.உ.சி யின் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. சென்னையில் ஐந்து வருடம் பணிபுரிந்த பிறகு தற்போது திருவாரூரில் வரும் ஜூன் 30-ஆம் தேதியன்று பணி யிலிருந்து ஓய்வு பெற உள்ளார். 51 வயதில் பணியில் சேர்ந்து 9 வருட காலம் மட்டுமே பணியாற்றி உள்ளார். கலைஞர் பிறந்த நாளான ஜூன்-3ந்தேதி பிறந்த இவர் கலைஞரின் சொந்த ஊரில் பணியாற்றி, அவர் மிகவும் நேசித்த தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவதை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார். அதே நேரத்தில் தனது மனைவி ராணி மற்றும் அவரது ஒரே மகளும் வ.உ.சி.யின் எள்ளுப் பேத்தியுமான இளநிலை பொறியியல் பட்டதாரி நெ.சாய்லெட்சுமி ஆகி யோரின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார். காரணம் பழைய ஓய்வூதிய திட்டமா? புதிய ஓய்வூதிய திட்டமா? என்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் தான். எது நடந்தாலும் குறுகிய காலமே அரசுப் பணியாற்றிய தனக்கு பெரிய நன்மை கள் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. கிடைப்ப தைக் கொண்டு என்ன செய்வது? குடியிருப்ப தற்கு சொந்த வீடு இல்லை. ஓய்வுபெற்ற பிறகு என்ன ஆகப் போகிறோம் என்ற நிலையில் சு.நெல்லையப்பன் உள்ளார்.
உதவித்தொகை-கல்வி உதவி
பல கட்டங்களாக வாரிசுகள் என்ற அடிப்படை யில் சிற்சில உதவிகள் கிடைத்துள்ளன. திரு நெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப் பட்டு தூத்துக்குடி புதிய வருவாய் மாவட்டம் உருவான போது இவரது பாட்டி சி.ஆனந்த வள்ளிக்கு அன்றைய அரசு 25ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் மாதம் 800 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவரது மகளும் சு.நெல்லையப்பனின் தாயாருமான சேதுலெட்சுமி க்கும் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது கணவர் உரிமை கோரியபோது அவர் நேரடி வாரிசு இல்லை என மறுக்கப்படுகிறது. அதன் பிறகு வ.உ.சி.யின் எள்ளுப் பேத்தி என்பதையறிந்து கல்வியாளர் ஏ.சி.சண்முகம் இவரது மகள் நெ.சாய்லெட்சுமிக்கு தனது கல்லூரியில் கட்டணம் இல்லாமல் இடம் வழங்கி படிப்பிற்கு உதவியுள்ளார். படிப்பு முடிந்த பிறகு அரசின் போட்டித் தேர்வுகளுக்குத் தயா ராகி வருகின்றார் சாய் லெட்சுமி. மொழிப்போர் தியாகிகளை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல உதவிகளை செய்வதைப் போல சுதந்திரப் போராட்ட தியாகி களின் குடும்பங்களும் தங்கள் தேவைக்காக கோரிக்கைகளை வைத்து அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் அரசே இந்தக் குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவரது வாரிசு களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதே நற்சிந்தனை யாளர்களின் கருத்தாக உள்ளது.
திருவாரூரில் வசிக்கும் இந்தக் குடும்பத் தினரை வ.உ.சியின் 150 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு தீக்கதிர் சார்பில் சந்தித்து உரையாடிய போது, பல தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றது. வ.உ.சி. கைப்பட எழுதியக் கடிதத்தை பார்க்கவும் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தமிழக முதலமைச்சரும் அரசும் இந்த வாரிசு களுக்கு நிரந்தர உதவி செய்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வப்போது செய்தி ஊடகங்களில் வரக்கூடிய செய்திகள், நேர் காணல் போன்றவற்றை வைத்து அரசுகள் சில உதவிகளை செய்கின்றது. தற்போது சு.நெல்லை யப்பன் தனது கோரிக்கைகளுடன் குடும்பத் தினரோடு முதல்வரை சந்திக்க விரும்புகிறார்.
தான் பணிநிறைவு அடைய இருப்பதால் தனது மகளுக்கு சிறப்பு நேர்வாகக் கருதி வ.உ.சி யின் எள்ளுப்பேத்தி என்ற தகுதிக்காகவும் கருணை அடிப்படையிலும் கல்வித்தகுதிகேற்ப நிரந்தர அரசுப் பணிக்கு ஆணை பிறப்பித்து உதவிட வேண்டும் என்பதோடு தாங்கள் வசிப்பதற்கு அர சின் சார்பில் இலவச மனைப்பட்டா வழங்கி சொந்த வீட்டில் குடியிருப்பதற்கு ஏதுவாக வீடு ஒன்றும் கட்டி த்தர வேண்டும் என்று கோருகிறார். தலைமை செய லகத்திலோ அல்லது திருவாரூர் மாவட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னி ட்டு வருகை தரும் போதோ தங்களின் குடும்பத்தி னர் சந்திக்க முதல்வர் வாய்ப்பளிக்க வேண்டும் என விரும்புகிறார். கோரிக்கை மனுவோடு காத்திருக்கிறார்.
- வ.வசந்தராஜன்
சந்திப்பில் உதவி: எஸ்.நவமணி,
செ.பரிசுத்தம் தமிழ் வளர்ச்சித்துறை திருவாரூர்