இஸ்லாமாபாத், ஜன. 8- பாகிஸ்தானின் பஞ்சாப் மாகா ணத்தின் முர்ரி மற்றும் அதற்கு அரு காமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனங்களில் சிக்கி, குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். `மலைகளின் இளவரசி` என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிர தேசம், குளிர்காலங்களில் அதி களவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்நிலையில், பஞ்சாப்பின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, குறைந் தது 21 பேர் வரை உயிரிழந்திருக்க லாம் என, மீட்புப்பணிகளில் ஈடு பட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் பனிப் பொழிவு காரணமாக, தங்கள் கார் களுக்குள் பயணிகள் இருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதே இவர்களின் இறப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. போக்குவரத்துத் தடையால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் - முர்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. முர்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளன.