tamilnadu

பிரச்சாரத்தின்போது மாரடைப்பு: திமுக வேட்பாளர் மரணம்

தஞ்சாவூர்,பிப்.17- அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு திமுக வேட்பாளர் அனுசியா பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதியின் நேரு நகரை சேர்ந்த அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த 2  வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், வியாழ னன்று(பிப்.17)காலையிலிருந்தே வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  உடனி ருந்த ஆதரவாளர்கள் அருகில் இருந்த மருத்துவர்  ஒருவரை வரவழைத்து பரிசோ தித்தனர். அப்போது, அனுசியா இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் கட்சியி னர் அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து அனுசியா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.