tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா

புதுச்சேரி,ஜன.16- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராய ணசாமிக்கு கடந்த சில நாட்களாக உடல்ந லக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை யடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் ்படுத்திக் கொண்டார். இதனல், கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் ்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் ்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த 12ஆம் தேதி காந்தி நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரே இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் 13 ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.44 கோடி  அபராதம் வசூல்

சென்னை, ஜன.16- தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணி யாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ3.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், ஜனவரி  7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழு வதும் முகக்கவசம் அணியாமல் சென்ற வர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  1.64 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் சனிக்கிழமையன்று இரவு  நேர ஊரடங்கின்போது வழிகாட்டு நெறிமுறை களை மீறியதாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சைக்காக 1.91 லட்சம் படுக்கைகள் தயார் : அமைச்சர் 

சென்னை,ஜன.16- சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்ட ரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 950 படுக்கைகள் கொண்ட வார்டினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன், அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுகா தாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் ஞாயிறன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.  அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன. தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த படுக்கைகளில், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு 350 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநி லம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,912 பேர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 1,91,902 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். ஒமைக்ரான் தொற்றில் இருந்து முழுமை யாக பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயு தம் தடுப்பூசி மட்டுமே. ஆதலால் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்

சென்னை,ஜன.16- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 11, 12, 13 ஆம் தேதிகளில் 3 நாட்களுக்கு சுமார் 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையிலிருந்து 3 நாட்களில் மொத்தம் 8126 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது தவிர ரயில்கள் மற்றும் கார்கள் மூலமாகவும் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இதே போன்று பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு 4,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களின் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கும் வசதியை செய்துள்ளது. ஜன.17 முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்தவர்கள் எளிதாக சிரமமின்றி திரும்பி வர இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்றுள்ள சுமார் 7 லட்சம் பேர் திரும்பி வருவதற்காக  3,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த பஸ்களில் முன்பதிவு செய்யலாம் என்று தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.