டஹிடி தீவின் கடலுக்கு அடியே மிகவும் அரிய வகை ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது, கடந்த அதிமுக ஆட்சி யில் தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள் ளது. அரசாணை வெளி யிட்டுள்ளதாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வீரலூரில் பொது வழியில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருடைய சட லத்தை எடுத்து சென்ற தற்காக அச்சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் தொடர்பாக என்ன நட வடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி, ஆட்சியர் 15 நாட்களுக் குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய உணவு பாது காப்பு தர ஆணையத்தின் கீழ் செயல்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக் கான ஆய்வுக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மனி தர்கள் பயன்படுத்தக் கூடிய பாக்குகளை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடை பெறவிருக்கும் ஜனாதி பதி தேர்தலில், துணை ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரி வித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முத லீடு 26 சதவீதம் குறைந்து ள்ளதாக ஐநா வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு ‘ஏடி4” பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப் பந்தத்தை ஸ்வீடன் நிறு வனம் பெற்றுள்ளது.