tamilnadu

img

தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவைப் போற்றுவோம்

தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பின் கட்சியின் முதல் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.  தமிழ்நாட்டின் எல்லைப் போராட்டத்திற்காகவும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரியும் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ஆம் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கோரி ரத்தம் சிந்திய மகத்தான பொதுவுடமை இயக்கத்தின் போராளி அவர்.  விடுதலைக்கு முன்பும் நாடு விடுதலை பெற்ற பின்பும் சதி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கொடும் சிறைவாசத்தை அனுபவித்தவர். கம்யூனிஸ்டுகளுக்கே உரிய கம்பீரத்தோடும், எளிமையோடும் வாழ்ந்து மறைந்த தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு நாள் இன்று.

இன்று (மே23) தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு நாள்