“இவை அரசியல் கவிதைகள்” என்று தன் கவிதைகளை ஒளிவுமறைவின்றி பிரகடனம் செய்யும் நேர்மையாளர் கவிஞர் நா.வே. அருள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கவிதை இலக்கியத்துக்கான முகமாக அறியப்பட்டவர். தனது பள்ளிக் காலத்தில் இருந்தே கவிதைகளை எழுதிவரும் அருளின் முதல் தொகுப்புக்களாக “ஆயுதம்”, “மற்றவைநேரில்” ஆகியவை 2006 ஆம் ஆண்டு வெளிவந்தன. தொடர்ந்து பல தொகுப்புக்களையும், “இந்திரஜாலம்” என்ற கலை விமர்சகர் இந்திரனின் படைப்புக்கள் மீதான தனது விமர்சனங்களையும், “கிராம்சி புரண்டு படுக்கிறார்”, “வரம் வாங்கிவிட்டுக் கடவுளைக் கொன்றவர்கள்” ஆகிய அரசியல் கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பல விருதுகளை வென்ற ஆர்ப்பாட்டமில்லாத மனிதர் நா.வே.அருள். அவரது படைப்புக்களும் பார்வைகளும் குறித்து மதிப்பீடு செய்யும் ஒரு இலக்கிய விழாவை சிகரம் ச. செந்தில்நாதன் அறக்கட்டளை 12.02.24 அன்று சென்னை யில் நடத்தியது. மயிலை பாது தலைமையேற்க, தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை, ந.அருள் “படைப்புக்களும் பார்வைகளும்” என்ற நூலை வெளி யிட்டார். முனைவர் வா.மு.சே. ஆண்டவர், சந்தியா நடராஜன், ஜி.செல்வா, பாலைவனலாந்தர், பிரின்ஸ் கஜேந்திர பாபு, இரா.தெ.முத்து, சைதை ஜெ உள்ளிட்ட பலர் உரையாற்றினர். பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் க.நாகராஜன் சிறப்பிக்கப்பட்டார். ஆய்வாளர் பா.வீர மணி, பாரி கபிலன், ஜின்னா அஸ்மி, ஹேமாவதி அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலைபாலு தலைமையுரை
நா.வே.அருள் மேடைகளில் வாசித்த கவிதைகளை யும் தொகுத்தால் இன்னும் பல நூல்கள் வெளிவரும். அருளுக்கு தமிழ்கற்றுக் கொடுத்தவரே இவருடைய கவிதைகளை சிலாகித்து எழுதியிருக்கிறார் என்பது அருளின் சிறப்பைச் சொல்லும். “தோற்றத்தில் அருள் சாந்தமானவராகத் தோன்று பவர்; ஆனால் எப்போதும் ஆயுதத்துடன் இருப்பவர் என்று இந்திரன் அருளைப் பற்றிச் சொல்வார். அருள் ‘ஆயுதம்’ என்னும் நூலைக் கொடுத்தவர் மட்டுமல்ல, அவர் கவிதைகளும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு ஆயுதமே. ‘கிராம்சி புரண்டு படுக்கிறார்’ என்ற ஒற்றைவரி தான் தன்னைக் கவர்ந்து அவருக்கு இப்படி ஒரு விழா வை, ஆய்வரங்கை நடத்த வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது என சிகரம் அறக்கட்டளையின் நிறு வனர் ச.செந்தில்நாதன் மனம் திறந்து சொல்கிறார். அந்த ஒற்றைவரிதான் அருளை ஒரு முழுமை யான கவிஞனாக, சமூக அக்கறை உள்ளவனாக, சமூக சிந்தனை உள்ளவனாக தமக்கு அடையாளப்படுத்தி யதாக ச.செந்தில்நாதன் குறிப்பிடுகிறார். தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் இயங்கும் இலக்கிய அமைப்பு களை நன்கு அறிந்தவர், ஒத்த கருத்துள்ள புள்ளி யில் அனைவரையும் ஒருங்கிணைத்து பலகூட்டங்களை யும் இயக்கங்களையும் கண்டவர் ச.செந்தில்நாதன். அவர் அருளை சரியாகவே மதிப்பீடு செய்துள்ளதன் அடையாளம்தான் இந்த அரங்கம். அவருடைய ‘பச்சை ரத்தம்’ என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா “விவ சாயிகளின் வாழ்க்கையையும் அவர்களின் மகத்தான போராட்டத்தையும் அழகிய சித்திரங்களாக வரைந்து விவசாயிகள் இயக்கத்திற்குப் பெரும் சேவை செய்தி ருக்கிறார் கவிஞர் நா.வே.அருள்” என்று புகழ்ந்தார். ‘பெண்ணே நீ’ என்ற பருவ இதழில் நா.வே. அருள் தொடர்ந்து பெண்களுக்கு எழுதிய கடிதங்கள் அன்றைய நாட்களில் குறிப்பாகக் கவனிக்கப்பட்டன. பெண்களின் பாடுகளை, ஒரு ஆணின் நிலையில் இருந்து பார்த்து அவள் எழுதிய கடிதங்கள் பெண்ணியக் களத்தில் மிகுந்த மதிப்புக்குரியவை. அந்த நேரத்தில் ‘பெண்ணே நீ’ பொறுப்பாசிரியாக இருந்த பாலு சத்யாவைக் குறிப்பிட வேண்டும். அந்தக் கடிதங்கள் ‘மற்றவை நேரில்’ என்ற நூலாக வெளிவந்தன.
கலை விமர்சகர் இந்திரன் சிறப்புரை
ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பெரும்பணி யை சிகரம் அறக்கட்டளை செய்துள்ளது என்பது பெரு மகிழ்ச்சிக்குரியது. அவருடைய கவிதைகளை நான் தொடக்கம் முதல் கவனித்துக் கொண்டு இருப்பவன். வண்ணதாசனுடன் மிக நெருக்கமாக இருந்தவர். இதற்கு மேல் தமுஎகச என்ற இயக்கம் அவரது வளர்ச்சிக்கு மிக ஆதரவாக, காரணமாக அமைந்துள்ளது என்பது மிக உண்மை. அருள் தொடக்க காலத்தில் மரபுக் கவிதை எழுதிய வர். மரபுக் கவிதைக்காக தமுஎச இயக்கம் நடத்திய போட்டியில் பரிசை வென்றிருக்கிறார். மொழியின் வளர்ச்சி என்பது ஏதோ ஒரு சாராரால் மட்டுமே ஏற்பட்ட ஒன்றல்ல. சாமானிய உழைக்கும் மக்கள், ஏர் ஓட்டியவன், படித்தவன், படிக்காதவன் என எல்லோரும் சேர்ந்து உளிகொண்டு செதுக்கிய அழகிய சிற்பம்தான் தமிழ்மொழி. வாய்மொழி மரபு கொடுத்த தமிழ்ச்செல்வம் மிக அதிகம். சங்க இலக்கியங்களின் ஆதார சுருதி. நான் இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வந்த நேரத் தில் பாரத் ஸ்டேட் வங்கியில் அருள் பணியாற்றிக் கொண்டிருந்தார். தன் கவிதைகளை என்னிடம் கொண்டு வந்து வாசித்துக் காட்டுவார். அப்படிப்பட்ட ஒரு கவி தைக்கு முதல் பரிசு கிடைத்ததை என்னிடம் வந்து மகிழ்ச்சி யுடன் பகிர்ந்து கொண்டார். இராணி வார இதழும் என்ஃபீல்டு மோஃபாவும் இணைந்து நடத்திய போட்டி அது. முதல் பரிசு ஒரு மோஃபா இருசக்கர வாகனம். (நடு வர்களாக வைரமுத்துவும், பொன்மணி வைரமுத்துவும் இருந்தார்கள்). நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாசிப்புத்தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆழ்ந்து வாசிக்கிறார். சலிக்க வைக்கின்ற, சள்ளை ஊட்டுகின்ற இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே “மாற்றம் வரும், சாதிகள் ஒழியும், வறுமை ஒழிந்து நாடு முன்னேறும், நீதி யும் நேர்மையும் நிலை நாட்டப்படும்” என்று நம்பிக்கை யுடன் எழுதிக் கொண்டிருக்கிற அருளை நான் மதிக்கி றேன்.
தேடல் மிக்கவர் ஆன அருள் ஒரு கவிதையை என்னென்ன வகையில் எல்லாம் முயன்றால் கவிதை ஆகும் என்று தொடர்ந்து தேடகிறவராக இருக்கின்றார். அவரது தொடக்க காலக் கவிதைகளில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடைய கவிதைகளில் தொடர்ந்து மாற்றங்களைக் கண்டு வருன்கிறேன். இப்போது எழுதியுள்ள ‘கிராம்சி புரண்டு படுக்கிறார்’ என்ற கவிதைத் தொகுப்பு மிகச் சிறப்பானது. கவிதையின் மிக அடிப்படையான விசயம் எது? மாற்றம், தொடர்ந்த அவதானிப்பு. இது அருளுக்கு கைகூடியது. அவரது வளர்ச்சியின் அடிப்படையும் அது. மேகங்கள் உருமாறிக் கொண்டே வருவது போல, அவ ரது கவிதைகளின் வடிவமும் வீச்சும் தொடர்ந்து மாறிக் கொண்டே வருவதைப் பார்க்க முடியும். இப்போது அவர் எழுதியுள்ள, “கிராம்சி புரண்டு படுக்கிறார்” என்ற கவிதைத் தொகுப்பு அவர் வளர்ச்சி யின் இன்றைய கட்டம். அருளுடைய நட்பு வட்டாரம் மிகப் பெரியது. அவர் சார்ந்து இயங்கும் இயக்கம் கற்றுத் தந்துள்ள அரசியல்,
அவரது உலகப் பார்வை எல்லாமும் அவரை அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டத்துக்கு கொண்டு செல்வதை உணர முடியும். சாமான்ய மக்களின் துயரத்தை, பாடுகளை எழுதுகின்ற, பாடுகின்ற கவி ஞர்கள்தான் அவரது நட்புவட்டாரம். பெருமைக்குரி யது. பாழடைந்த கோவிலில் துளிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அரசமரத்தின் நம்பிக்கைதான் அரு ளின் நம்பிக்கை. “கவிதையில் வைத்துவிட்டு வந்த வாள் சும்மா இருப்பதில்லை, போருக்குக் கிளம்பிவிடுகிறது” என்று எழுதுகிறார் நா.வே.அருள். பகடி சொல்கிறார்.. பகடி என்பது ஒரு போர்க்கருவி தான், கவிதையில் ஒரு கட்டத்தில் சிக்கலான படி மங்களை தன் கவிதையில் வைத்த அருள் இப்போது எளிமையை நோக்கி நகர்கிறார். எளிமையை நோக்கி ஒரு கவிதை நகருமெனில் அதைப் போல் உன்னத மான ஒரு விசயம் எதுவும் இல்லை. “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...” என்ற கவிதையில் எளிமை உள்ளது. அழகும் உள்ள தல்லவா? அதில் சோகவுணர்வு உடனே தென்பட வில்லையா? நிலவின் அத்தனை நினைவுக்கும் வந்துவிடவில்லையா? அருள் அரசியல் செயற்பாட்டாளர், மாபெரும் கவிஞர். எதிர்மறையான விமர்சனங்களையும் கேட்டுக் கொண்டே எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். எழுது வார். சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் உயரம், மரி யாதை ஆகியவற்றையும் இந்த அரங்கில் கூடியுள்ள கூட்டத்தைக் காணும் போது உணரமுடிகின்றது. அறக்கட்டறை வாயிலாக அமைதியாக அவர் செப்பும் அரும்பணிகள் அவர் ஒரு இலக்கிய திசைகாட்டி என்ப தற்கான அடையாளம்தான் இந்தக் கூட்டம். அருளுக்கு அவர் தந்த மரியாதைதான் இந்த ஆய்வரங்கம்.
தொகுப்பு: மு.இக்பால் அகமது