சென்னை, மே 16- சென்னை தி.நகரில் அமைக்கப் பட்டுள்ள ஆகாய நடைபாதையை மக்க ளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தி.நகர் பேருந்து நிலை யம் முதல் மாம்பலம் ரயில் நிலை யம் வரை ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தி.நகர் பொது மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் ஆயிரக் னணக்கான மக்கள் கடந்து செல்லக் கூடிய பகுதியாக தி.நகர் பகுதி உள்ளது. அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் இந்த பகுதியில் கூடுவதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுவதோடு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தி.நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாம்பலம் மின்சார ரயில் நிறுத்தம் வரை ரூ. 28.45 கோடி மதிப்பீட்டில் 600 மீட்டர் தொலை வில் 4 மீட்டர் அகலத்தில் இரும்பு தூண்களால் ஆன உயர்மட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று (மே 16) நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கிகளுடன் கூடிய இந்த நீண்ட ஆகாய நடைபாதையை மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணா நிதி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.