tamilnadu

img

காவலர் வீரவணக்க நாள்: டிஜிபி மரியாதை

சென்னை,அக்.21- கடந்த ஓராண்டில் இந்தியா  முழுவதும் பணியின்போது உயிரி ழந்த 264 காவல்துறையினருக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணை யர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோ பர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வரு கிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டில் இந்தியா முழு வதும் பணியின்போது வீரமரண மடைந்த 264 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படை யினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையிலுள்ள காவல்துறை தலைமை இயக்கு நர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் நடைபெற்றது. காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந் திரபாபு மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தார்.  தொடர்ந்து, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஆ.மு.நாரா யணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், தமிழக காவல்துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள், மற்றும்  காவல் ஆளிநர்கள் மலர் வளை யம் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  இறந்த காவல் ஆளிநர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.