சென்னை, மே 20 - தமிழக அரசு துறைகளில் சார் பதிவா ளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் மாநிலம் முழுவதும் (மே 21 சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 6.82 லட்சம் பேர் பெண்கள். தமிழ் வழியில் படித்த 80 ஆயிரம் பேரும் இத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வில் பொது தமிழ் பிரிவில் 9.47 லட்சம் பேரும், பொது ஆங்கிலப் பிரிவில் 2.31 லட்சம் பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 38 மாவட்டங்களில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை கண்காணிக்க 300-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 6,500 ஆய்வு குழுக்கள் களம் இறங்கு கின்றன. இவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களில் ஆய்வு செய்வார்கள்.
இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ கிராபர்களும் தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்கின்ற னர். தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்கள் உடனடியாக தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்படு வார்கள் என்றும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலை நகர் சென்னையில் மட்டும் 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுகின்ற னர். மதுரையில் 64 ஆயிரத்து 85 பேரும், சேலத்தில் 63 ஆயிரம் பேரும், திருச்சி யில் 50 ஆயிரம் பேரும், கோவையில் 45 ஆயிரம் பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வில் பங்கேற்க 9 மணிக்கு பின்னர் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்கா ளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்றும் கூறப்பட் டுள்ளது.