விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் 101வது பிறந்த நாளையொட்டி அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வாழ்த்து தெரிவித்தார். (அடுத்த படம் ) தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவருக்கு தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி துணைமேயர் காமராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை, ஜூலை 15 - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா வெள்ளியன்று (ஜூலை 15) 101ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். இதனையொட்டி குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அவரை, தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விடுதலைக்கு முன்பு, பின்பு என 8 ஆண்டு கள் சிறை வாழ்க்கை, 3 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை, 3 முறை சட்டமன்ற உறுப்பினர், மாண வர் சங்கத் தலைவர், விவசாயிகள் சங்கத் தலை வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கிய 32 தலைவர்களில் ஒருவர் என அயராது நாட்டிற்காக உழைத்தவர் என்.சங்கரய்யா. அவரது 100ஆவது பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் உயரிய விருதான ‘தகைசால் தமிழர்’ விருதை மாநில அரசு என்.சங்கரய்யா வுக்கு வழங்கியது. இந்திய கம்யூனிச இயக்கத் தின் அடையாளமாக விளங்கக் கூடியவர் என். சங்கரய்யா. இன்றைக்கும் தினசரி செய்தித்தாள் களை வாசிப்பதோடு, அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து கருத்துக்களை கூறக்கூடியவர். 101ஆவது பிறந்த நாளை கட்சி அணிகள் மாநிலம் முழுவதும், செங்கொடிகளை ஏற்றி, கல்வெட்டுகள் திறந்து, எளியவர்களுக்கு உதவிடும் வகையில் கொண்டாடின. தோழர் என்.சங்கரய்யாவின் பிறந்தநாளை யொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண் முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கன கராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் வெ.ராஜசேகரன், ஆர்.வேல்முரு கன், டி.ரவீந்திரன், சாமி.நடராஜன், எஸ்.ஏ. பெருமாள், பா.ஜான்சிராணி உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் குணமடைய விழைவு
தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் நகராட்சி துணைமேயர் காமராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரி வித்தனர். அப்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைந்து பூரண குணமடைய விருப்பம் தெரி வித்ததாக தெரிவிக்குமாறு அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம், என்.சங்கரய்யா கூறினார்.
ஆர்.நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் ஆர்.நல்லகண்ணு, தோழர் சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கடந்த கால போராட்ட, சிறை அனுபவங்கள், பயணங்கள், மாநாடுகள், கட்சியின் நிலைமைகள் குறித்து நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.
முதலமைச்சர் வாழ்த்து
“பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறை யினருக்கு அடையாளம் காட்டும் தகைசால் தமிழர் தோழர்.சங்கரய்யா அவர்களுக்கு, 101-ஆவது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன்! போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க!” என முத லமைச்சர் தனது சுட்டுரையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சுதந்திரப் போராட்ட வீரர். மானுட சமத்து வத்திற்கு உழைத்த பொதுவுடைமை சிந்தனை யாளர். 100-ஆவது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தகைசால் தமிழர் விருது தொகையை கொரோனா நிதிக்கு வழங்கி யவர். தோழர் சங்கரய்யா அவர்களின் 101-ஆவது பிறந்தநாளில் அவரின் போராட்ட வாழ்வை வாழ்த்தி வணங்குவோம்” என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தமது சுட்டுரை வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வழிகாட்ட வேண்டும்: கி.வீரமணி வாழ்த்து
101ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தோழர் சங்கரய்யா வாழ்க, வாழ்கவே என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்தி யுள்ளார். பொதுவுடைமை இயக்கத்தின் ஈடு இணையற்ற தியாகச் செம்மல், விழுப்புண்கள் பலவும் ஏற்ற போராளி, கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து முத்திரை பதித்த தோழர் சங்கரய்யா (சிபி.எம்.) 101ஆம் ஆண்டில் (15.7.2022) அடி எடுத்து வைக்கிறார் என்பது பொது வாழ்வில் இருப்போர்க்கு இனிக்கும் செய்தி. நல்ல உடல் வளத்துடன் மேலும் நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டில் தலைதூக்கும் பிற்போக்குச் சக்திகளை எதிர் கொள்ள நாட்டு மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இடதுசாரி ஜனநாயக முன்னணி
பிறந்தநாளையொட்டி தமது வாழ்த்துச் செய்தியில், “நாட்டு மக்களின் முன்னேற்றத் திற்கு உத்தரவாதம் செய்ய, மக்களின் போராட்டங் களை நடத்த, தலைமை தாங்க இடதுசாரி ஜனநாயக சக்திகளின் முன்னணியை பலப் படுத்த வேண்டியது மிக அவசியம். இடதுசாரி ஜனநாயக முன்னணியை உருவாக்குவதுதான் நம்முன்னுள்ள பிரதான கடமையாகும். இந்தியாவில் நமது லட்சியங்களை நிறை வேற்ற இடதுசாரி ஜனநாயக முன்னணியே உறுதுணை செய்யும். ஆகவே, அனைத்து பகுதி மக்களும் இதற்காக உறுதி ஏற்க வேண்டும். இன்குலாப் ஜிந்தாபாத்” என்று என்.சங்கரய்யா தெரிவித்துள்ளார்.