tamilnadu

img

ஆப்கானிஸ்தான் துயரங்கள்!

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரும் மனித துயரம், பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஆப்கானிஸ்தா னுக்கு பெருமளவில் நிதி உதவி செய்ய வேண்டும் என ஐநா சபை அவசர அறைகூவல் விடுத்துள்ளது. 440 கோடி டாலர் அவ சர நிதி உதவி தேவை என ஐநாவின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிப் பித்ஸ் கூறினார். 2023- ல் ஆயிரம் கோடி டாலர் தேவைப்படும் எனவும் கூறினார்.  2021 ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். உடனடி யாக ஆப்கானிஸ்தானின் நிதி ஆயிரம் கோடி டாலர் நியூ யார்க் வங்கிகளிலும் ஐ.எம்.எப்-பிலும் முடக்கப்பட்டது. அமெ ரிக்காவின் இரட்டை கோபுரம் 2001 செப்டம்பர் 11 இல் தீவிர வாதிகளால் தகர்க்கப்பட்டதால் பலியான குடும்பங்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் வழங்க இந்த நிதியை முடக்கி உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஐநா பொதுச் செய லாளர் ஆப்கானிஸ்தானின் நிதியை முடக்கியதை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பனிக் காலமும் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானின் சாலைகளில் பனிமயமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை. 90 சத விகித மக்கள் பட்டினியால் வாடும் நிலை உள்ளது. ஆப்கனின் ஏழு முக்கிய தாலிபான் தலைவர்களில் ஒரு வரும் துணை அயலுறவு அமைச்சருமான முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், ஆப்கனுக்கான ஐ.நா விசேஷ தூதருடன் நீண்ட நேரம் பேசினார். ஆப்கன் தலைநகர் காபூலில் அமெ ரிக்க தூதரகம் திறந்து, ஆப்கானிஸ்தானுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆப்கா னின் துயரங்களுக்கு காரணமான அமெரிக்கா முன்வர வேண்டும் என கேட்டுள்ளார் .அண்டை நாடுகளான துருக்மெ னிஸ்தான், உஸ்பெக்கிஸ்தானிலிருந்தும் ஆப்கனுக்கு உணவு, மருந்து,துணி போன்ற உதவிகள் வருகின்றன. ஈரான் அரசு, நாங்கள் தலிபான்களை அங்கீகரிக்க விட்டாலும் உதவி கள் அனுப்புகிறோம் என கூறியுள்ளது.