tamilnadu

img

ஒன்றிய அரசின் ஒற்றர்களைப் போல் செயல்படும் ஆளுநர்கள்!

பி.ஆர்.நடராஜன் எம்.பி. தொகுதி நிதியில்  51 சமுதாய நலக்கூடங்கள்

பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தம்பலத்தில் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பி.ஆர்.நடராஜன் கூறுகையில், இது தனது பதவிக்காலத்தில் திறக்கப்பட்ட 46ஆவது சமுதாய நலக்கூடம் ஆகும். இன்னும் 5 இடங்களில் சமுதாயக் கூடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களுக்கு நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கு மண்டபங்கள் கிடைப்பதில்லை. மிகப்பெரும் செலவு பிடிக்கக் கூடியதாக உள்ள திருமண மண்டபங்களில் ஏழை மக்களின் குடும்ப விழாக்களை நடத்த இயலவில்லை. எனவேதான் எம்பி தொகுதி நிதியில் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய நலக் கூடங்கள் கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறேன் என்று கூறினார்.

திருப்பூர், பிப்.12- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் ஒற்றர்களைப் போல் செயல்படுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார். கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திங்களன்று  பல்லடம், சூலூர் சட்டமன்ற தொகுதி களுக்கு உட்பட்ட பகுதிகளில், நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பி.ஆர். நடராஜன் கூறியதாவது:

ஒத்துழைக்காத ஒன்றிய அரசு

ஒன்றிய பாரதிய ஜனதா அரசு ஐந்தாண்டு கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை.  முழுமையாக ஒத்துழைப்பு தந்திருந்தால் இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களை நிறை வேற்றி இருக்க முடியும். குறிப்பாக கோவை  தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறு குறு நடுத்தர தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி பிரச்சனையில் முழுமை அடைந்த பொருட்களுக்கு 28 சதவீத ஜி எஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதேசமயம் ஜாப் ஒர்க் ஆர்டர்களுக்கு 12 சதவீத வரி விதிக்கிறது இந்த அரசு. இதனால் இந்த தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஜாப் ஒர்க் பணிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால் ஒன்றிய அரசு அதை நிறைவேற்ற மறுக்கிறது. அதேபோல் ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமான நூல் விலை உயர்வுக்கு இறக்குமதி வரி 11 சத வீதம் விதிக்கப்படுவது முக்கியக் காரண மாகும். அதையும் ஒன்றிய அரசு விலக்க மறுக்கிறது.

சாமானியர்களை புறக்கணிக்கும் ரயில்வே துறை

அதேபோல் கோவை ரயில்நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்கு காலை 5 மணி, 6 மணி, 7.40 மணி என அடுத்தடுத்து காலை நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வந்த போதும் அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மேலும் எல்லா முக்கிய வழித்தடங்களிலும் இயக்கப்படும் ரயில்களை வந்தே பாரத் என்று அறிவித்து வருகிறார்கள். மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் இந்த ரயில்களில் ஏழை, எளிய மக்கள் போக முடியாத நெருக்கடி ஏற்படுகிறது. சாமானியர்களின் கோரிக்கை யை இந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

ஒன்றிய அரசின் ஒற்றர்களா?

தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் ஒற்றர்களைப் போல்  செயல்படுகிறார்கள். தமிழக சட்டமன்றத் தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியே போக வேண்டும் என்று முடிவு செய்து தான் சட்டமன்றத்திற்கே வருகிறார். தென் மாநிலங்களை ஒன்றிய அரசு திட்ட மிட்டு வஞ்சிக்கிறது. நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பதில்லை. பல நெருக்கடிகளுக்கு இடையிலும் மாநில அரசு மகளிருக்கு உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அத்து டன் மாநில உரிமை, மாநில அரசின் நிதி  பங்கீடு கோரிக்கை, மொழி உரிமை ஆகிய வற்றுக்கும் மாநில திமுக அரசு குரல் கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் வஞ்சனைக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு கொடுத்து அதை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறினார்.