மாற்றுத் திறனாளிகள் நியமனப் பதவி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
சென்னை, ஜூன் 3 - உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 16 அன்று தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் சார்பில் இரண்டு சட்ட முன்வடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தினார். அவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கும் அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத் திறனாளிகள், சிற்றூராட்சி களில் 12 ஆயிரத்து 913, ஊராட்சி ஒன்றி யங்களில் 388, மாவட்ட ஊராட்சியில் 37 மாற்றுத் திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அதாவது, தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் நேரடியாக உறுப்பினர்களாக ஆக்கப்படு வார்கள். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாக பெறுவதற்கு இந்தச் சட்ட முன் வடிவுகள் வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்பு களில் 14,000 மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆளுநர் ஒப்புதல் எதிர்பார்த்ததே! தமிழக அரசின் 2 சட்டமசோதாக் களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப் பது குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்தது தான். சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை”என்றார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மாற்றம்
சென்னை, ஜூன் 3 - தமிழகத்தில் கனிமவள வழக்கு, டாஸ்மாக் வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், கதிர் ஆனந்த் எம்.பி., தொடர்புடைய வழக்குகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளான பியூஸ் குமார் யாதவ் மற்றும் கார்த்திக் தசாரி ஆகிய இருவரும் வருமான வரித்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.