tamilnadu

செய்திகள்

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 5 ஆம்  தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இணையதளத்திற்கு அடி மையாகி தவிக்கும் சிறுவர்கள், மாணவர்களுக்கும் தொலைத்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு இணையதள சார்பு மீள் வாழ்வு மையம் அனைத்து அரசு மருத்து வக் கல்லூரிகளிலும் தொடங்கப் பட்டுள்ளது என்று  மக்கள் நல்வாழ் வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள்  வரும் மார்ச் 22 ஆம் தேதிக்குள்  முடிவடை யும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள் ளார்.

தமிழகத்தைப் போல் புதுச்சேரி யிலும் மகளிருக்கென இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர ப்ரியங்கா அறி வித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 551 கோ வில்களில் இன்னும் 7 மாதங்க ளில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில இந்து  சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டில் 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று மக்களவையில் ஒன்றிய  அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் பாரம்பரிய பூட்டுத்  தொழில்களை  துவங்க  தொழில்  முனைவோர்களுக்கு தமிழக  அரசு  சார்பில்  மானியம்  வழங்கப்படுகிறது என்று  மாவட்ட  ஆட்சியர்  விசாகன் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் முதல் ஒமைக்ரான் வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரி வித்துள்ளார்.