tamilnadu

திறந்தவெளி புல் அரங்கில் ஆளுநர் பதவி ஏற்பு விழா

சென்னை,செப்.17- தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத் திற்கு மாற்றப்பட்ட நிலை யில் தமிழகத்தின் புதிய ஆளு நராக ஆர்.என்.ரவிநிய மிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி யான இவர் மத்திய உளவுப்  பிரிவின் சிறப்பு இயக்குந ராக பணியாற்றியவர். 2019 ஆம் ஆண்டு முதல் நாக லாந்து ஆளுநராக இருந்து  வந்தார். தற்போது தமிழ்  நாட்டிற்கு மாற்றப்பட்டுள் ளார். தில்லியிலிருந்து சென் னைக்கு வந்த அவரை விமான நிலையத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வர வேற்றார். பிறகு, ஆளுநர் மாளிகையின் பிரதான வாசல் பகுதியிலிருந்து தமிழ்நாடு காவல் துறையின் குதிரைப்படை சார்பில் 12 குதிரைகள் அணிவகுப்புடன் மாளிகைக்கு ஆளுநர் அழைத்து செல்லப்பட்டார். அதிகாரிகளும் அவரை  வரவேற்று அழைத்துச் சென்றனர். அவருடன் அவ ரது உறவினர்கள் 15 பேரும் வந்துள்ளனர். சனிக்கிழமை ஆளுநர் மாளிகையில் காலை 10.35 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அங்குள்ள தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் பந்தல்  அமைத்து விழா நடத்தப் படுகிறது. சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி  சஞ்சீவ்பானர்ஜி பதவிப் பிர மாணம் செய்து வைக்கிறார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங் கேற்கிறார்கள். கொரோனா காலகட்டம் என்பதால் அதிக பட்சமாக 500 பேர் பங்கேற் கும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

;