சென்னை, மார்ச் 15- அரசுத்துறை வாகனங்கள் படிப்படியாக மின்சார வாகனங்க ளாக மாற்றப்படும் என்று தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் கூறினார். மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து கிளைமேட் டிரெண்ட்ஸ், க்ளீன் மொபிலிட்டி ஷிப்ட் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை, மதுரை, கோவையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் சென்னையில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வின்படி, குறைவான சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட வசதி குறைபாடு காரணமாகவே வணிக வாகன பயன்பாட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் மின்வாகனங்கள் வாங்க தயங்குகின்றனர். அதே போல, சொந்த வாகனம் வைத்திருப் போரில் 44 விழுக்காட்டினர் மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்கவும், 4 விழுக்காட்டினர் மட்டுமே மின்சார கார்கள் வாங்க வும் விரும்புகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாடு அரசின் மின்வாகன கொள்கை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மின்வா கனங்கள் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணிக பயன்பாட்டுக்கான மின்வா கனங்களின் விற்பனையை அதிகரிக் கும் வகையில் சிறந்த கடன் திட்டங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும்” என்றார். மின்சார பேருந்து வாங்க அரசு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக அரசு வாகனங் களை மின்சார வாகனமாக மாற்றி னால் கூடுதல் செலவு ஏற்படும். எனவே, வாகனங்கள் படிப்படியாக மின்சார வாகனமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.