நாகர்கோவில், செப்.21- தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் கூட்டமைப்பி னர் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (செப்.20) நடத்திய ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, அதிமுக ஆட்சியில் உதவிபெறும் பள்ளிகள் பால் பாகுபாடு காட்டப்பட்டதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத் தார். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.கனகராஜ் தலைமை வகித்தார். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங் களான 7.5 சதவிகித உயர்கல்வி ஒதுக்கீடு, உயர்கல்விக்கு செல்லும் மாணவி களுக்கு வழங்கப்படும் மாதம் 1000 ஊக் கத்தொகை.
காலைச் சிற்றுண்டி, ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக் கும் மாணவர்களுக்கு கட்டண சலுகை போன்றவற்றை அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங் கிய மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜே.எம்.டோமினிக் ராஜ், குழித் துறை மறைமாவட்ட கத்தோலிக்கப் பள்ளி களின் கூட்டாண்மை மேலாளர் எம். கலிஸ்டஸ், குமரிப் பேராய கூட்டு மேலா ண்மை பள்ளிகளின் கூட்டு மேலாளர் எஸ். கிறிஸ்டோபர் இயேசுமணி, ஜான் பெனிட்டோ, ஜே.கண்ணன், ராதாகிருஷ்ணன், வெற்றி வேல், எஸ்.ராமச்சந்திரன், டி.பிரைட்சிங் உள் ளிட்டோர் பேசினர். ஆயிரக்கணக்கான ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத கல்விப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.