2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 11 - மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அர சாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழி காட்டு நெறிமுறைகளின்படி, பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கிராம உதவியா ளர் பணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நடைமுறை யுடன் புதிதாக விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தேர்ச்சி அடைய வில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் வைத்திருந் தால் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தா லும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவி யாளர் பணிக்கு நடைபெறும் நேர்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கள் முறையாக உரிய வழிமுறைகளின்படி வெளியிடப்படு வதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையிட வேண்டும். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறு வதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே, தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப் பட வேண்டும். கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்களில் வெளி யிடப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் நிகழ்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கிராம உதவியாளர் பணிக்கான அறி விப்பு வெளியிடப்பட்டு, பணியிடங்கள் விரைவில் நிரப்பப்ப டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளூரில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.