tamilnadu

img

உச்ச நேரப் பயன்பாட்டு மின் கட்டணம் குறைப்பு!

சென்னை, நவ. 11 - உச்சநேரப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை 15 முதல் 25  விழுக்காடு வரை கட்டணம் குறைத்  தும், சோலார் மேற்கூரை அமைப்ப தற்கான நெட்வொர்க்கிங் கட்ட ணத்தை 50 விழுக்காடு வரை குறைத்  தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.  உச்ச நேரங்களில் பயன்படுத்தப் படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்ட ணம் நிர்ணயிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நெருக்  கடி ஏற்படுத்தியது. காலை 6 மணி  முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி  முதல் இரவு  10 மணி வரையும் மின்சா ரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக (Peak hours) கூறி, அந்த  நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்  திற்கு கூடுதல் மின் கட்டணம் வசூ லிப்பதற்கும், இதனை முதற்கட்டமாக தொழிற்சாலைகளிலும் பின்னர் வீடு களிலும் அமல்படுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி தாங்கள் கூறுவது படி செய்யும் மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி வழங்கப்படும் என்றும் மிரட்டியது.  இதன்படி, தமிழ்நாடு அரசு கடந்த  ஆண்டு செப்டம்பர் 10 அன்று மின்கட்ட ணத்தை உயர்த்தியது. இதில், குறு,  சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்க ளுக்கு நிலைக் கட்டணம் ரூ. 550 என்ற  அளவிற்கு இருமடங்கு உயர்த்தப் பட்டது. அதேபோல, உச்சநேர மின் பயன் பாட்டுக் கட்டணமும் 25 விழுக்காடு உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு  முழு வதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த  கட்டண உயர்வால் தாங்கள் பெருமள வில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்  தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு தொட ர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தி யுள்ள 30 விழுக்காடு நிலைக் கட்ட ணத்தை திரும்ப பெற வேண்டும். உச்சநேர மின்பயன்பாட்டுக் கட்ட ணத்தை 25 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும், இது பெரும் சுமையாக இருப்பதால், இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அதுபோல், 12 கிலோ வாட் வரை  மின்சார இணைப்பு பெற்றுள்ள எம்.எஸ்.எம்.இ. (MSME) நிறுவ னங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூ லிக்க வேண்டும். வெல்டிங் இணைப்பு களை 3-பி என்ற சிறப்பு அட்டவணை யில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து,  அதில் சில முக்கியக் கோரிக்கை களை ஏற்று உச்சநேர பயன்பாட்டுக் கான மின் கட்டணத்தை அரசு குறைத்து உள்ளது. மேலும் மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-இல் இருந்து 25 விழுக்காடு வரை கட்டணம் குறைத்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. சோலார் மேற்கூரை அமைப்ப தற்கான நெட்வொர்க்கிங் கட்ட ணத்தை 50 விழுக்காடு வரை குறைப்ப தாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள் ளது. இதனால் 196.10 கோடி ரூபாய்  இழப்பு ஏற்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.