tamilnadu

img

தியாகி அசோக் சகோதரருக்கு அரசுப் பணி

நெல்லை,ஜூலை 7- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொரு ளாளராக செயல்பட்டு வந்த தோழர் அசோக் சாதி ஆதிக்கச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார் .  அவரது சகோதரர் மணிகண்ட னுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முறையீடு செய்து வந்தது.  இந்நிலையில் ஜூலை 7 அன்று மணிகண்டனுக்கு களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி ஆணையை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் கே.ஶ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், சுடலைராஜ், செண்பகம் பெருமாள், துரைராஜ், நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.