tamilnadu

img

அரசு இ-சேவை நிரந்தர ஆதார் சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருநெல்வேலி, மே 31- நெல்லையில் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேவை மையம் ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் சேவை என்பதை கருத்தில் கொண்டு இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை அரசு மூடக்கூடாது, இ.சேவை ஊழியர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்கிட வேண்டும், சட்டப்படியான உரிமைகளை மறுக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை நூற்றாண்டு மண்டபம் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இ.சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பாலவிநாயகம் தலைமை தாங்கினார். தாயம்மாள் ராஜி, மகேஸ்வரி, பத்மாதேவி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனுவேல்சாமி வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசினார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.வேல்முருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.சுடலைராஜ், மாவட்டப் பொருளாளர் எஸ்.வண்ணமுத்து, மாநில குழு உறுப்பினர் எஸ்.பெருமாள் மற்றும் ஆல்பர்ட், ஸ்டான்லி ஆகியோர்  உரையாற்றினர். சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம் நிறைவுரையாற்றினார்.ஜான்சி நன்றி கூறினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.