tamilnadu

திருத்தணியில் நாளை அரசு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை,டிச.12- தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வையில் 1989 ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக கருணாநிதியின் ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வரு கிறது. இதன்மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழ ங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத் தில் இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் வழ ங்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்காக திருத்தணி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.