tamilnadu

அரசுப் பேருந்து கட்டணம் உயராது! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

அரசுப் பேருந்து கட்டணம் உயராது!   அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

சென்னை, ஜூன் 3 - தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் கட்டணம்  உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்து உள்ளார். டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ண யிக்கும் வகையில், உயர்நிலைக் குழுவை நிய மிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமை யாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட  அமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்தாலோசித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி உயர் நிலைக்குழு வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரி விக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து செய்தி யாளர்களிடம் பேசுகையில், “பேருந்துக் கட்டணம்  உயர்த்தப்படும் என்று வெளியாகும் செய்தி தவ றானது. அரசுப் பேருந்துக் கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப்  பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது” என்றா