விழுப்புரம், டிச. 10 - மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து ஓட்டுநர், நடத்து னர் ஆகியோர் கைது செய் யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரு கிறார். இவர் சொந்த ஊர் செல்ல வியாழக்கிழமை (டிச.9) இரவு விழுப்புரம் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து கொத்தமங்க லம் செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஏறினார். இந்த பேருந்தை ஓட்டுநர் அன்புச்செல்வன் ஓட்டினார். நடத்துநராக விழுப்புரம் அருகே குடுமியான் குப்பத்தை சேர்ந்த சிலம்பர சன் (32) என்பவர் இருந் தார். விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் மட்டுமே இருந்துள் ளார். அப்போது நடத்துநர் சிலம்பரசன் மாணவியை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவி கூச்சலிட்டபோதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதன்பின் பேருந்தை நிறுத்தாவிட்டால் கீழே குதித்து விடுவேன் என மாணவி கூறியுள்ளார். இதனால் வேறுவழி யின்றி ஓட்டுனர் அன்புச்செல் வன் பேருந்தை நிறுத்தி யுள்ளார். அதன்பின் உறவி னர்களுக்கு மாணவி தகவல் தெரிவித்தார். இது தொடர் பாக காணை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பந்து நடத்துநர், ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.