சென்னை,பிப்.9- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படு கிறது. அவற்றை வாங்கி அருந்து வோர் பாட்டில்களை உடைத்து வயல் வெளிகளில் வீசிச் சென்று விடுவதாக வும் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடி பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால் அவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, வயல் வெளிகளில் பாட்டில்கள் வீசப்படு வதால் விவசாயிகள் காயமடைவதாக வும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியில், பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மது பானங்கள் விற்கப்படுவதாகக் கூறி யுள்ள மனுதாரர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி யுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் தான் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட முடியாது. கண்ணாடி பாட்டில்களை வயல் வெளியில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி மனுவில் கோரிக்கை வைக்கப்பட வில்லை எனவும் கூறி, தள்ளுபடி செய்தது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடி யும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மதுபா னம் மட்டுமல்லாமல், பால் கூட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படு கிறது. எனவே, தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெளிவுபடுத்தினர்.