tamilnadu

img

மலைக்குறவன் மக்களுக்கு இனச்சான்று வழங்கிடுக!

சேலம், செப்.1 - மலைக்குறவன் மக்களுக்கு இனச் சான்று வழங்க வேண்டும் என வலி யுறுத்தி பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வரின் அறிவிப்பை  வருவாய்த்துறையினர் அலட்சியப் படுத்தக்கூடாது. ஆத்தூர் வட்டத்தில் வாழும் மலைக்குறவன் இன மக்க ளுக்கு இனச்சான்று வழங்கப் பட்டுள்ள நிலையில், அவர்களது உற்றார் உறவினரான பெத்தநாயக்கன் பாளையம் வட்டத்தில் வாழும் மலைக்குறவன் இன மக்களுக்கு இனச் சான்று வழங்காமல் புறக்கணிக்கப்படு கிறது. உடனடியாக அவர்களுக்கு இனச்சான்று வழங்க வேண்டும். பழங்குடியினர் நலவாரிய அட்டை, தொகுப்பு வீடுகள், இலவச வீட்டு மனைப் பட்டா, தொழில் கடன், மூங்கில் வெட்ட அனுமதி அட்டை ஆகியவை  உடனடியாக வழங்க வேண்டும். மலை க்குறவன் இன மக்களின் இனச்சான்று குறித்த விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வியாழ னன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட மலைக் குறவன் பழங்குடியினர் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மலைக்குறவன் சங்க நிர்வாகி சேட்டு  தலைமை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு உரையாற்றினார். இதில், மறைக்குறவன் சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பி னர் ஏ.ராமமூர்த்தி, தாலுகா செய லாளர் காளிதாஸ், பெத்தநாயக்கன் பாளையம் வார்டு கவுன்சிலர் ராம சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திரளான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.