பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் கூடாரமாக மாறியுள்ள பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரியில் இரு சாதி மோதலுக்கு இடையே, 17 வயது சிறுமியின் ஒருவரின் ஆபாச வீடியோவை மற்றொரு சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ள னர். இதனை தன்னுடைய செல்போனில் கண்ட அந்த சிறுமி நவம்பர் 3 அன்று தாயும், சகோதரியும் வெளியில் சென்றி ருந்தபோது வீட்டிலேயே தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இந்த சம்ப வம் நடைபெற்று 2 நாட்கள் கழித்துதான் மாவட்ட எஸ்பி கணேஷ் பிரசாத் சாஹா மூலமாக வெளியே கசிந்துந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. சாதிய மோதலால் ஆபாச வீடியோ மூலம் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால், தற்கொலை செய்து கொண்ட சிறுமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் அதிகாரப் பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பாதிக்கப் பட்ட சிறுமியின் உறவினர்கள் மறிய லில் ஈடுபட்டனர். மறியல் அடுத்த சில மணிநேரங்களில் வன்முறையாக லக்கிம் பூர் கேரியில் கடைகள் அடித்து நொறுக் கப்பட்டன.