tamilnadu

img

மதுரையில் மாபெரும் செஞ்சட்டை பேரணி

பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின்  சார்பில் மதுரையில் மே 29 ஞாயிறன்று நடைபெற்ற செஞ்சட்டை பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். கொளத்தூர் மணி தலைமை வகித்தார் . இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன், நாகை திருவள்ளுவன், கோவை ராமகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பொதுத்துறைகளை விற்கக்கூடாது, ஒரே நாடு, ஒரே மொழி,  ஒரே தேர்தல்  முழக்கத்தை மோடி அரசு கைவிட வேண்டும். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும். திருமண வயது வரம்புச் சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது .விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.