சென்னை, மார்ச் 27 - அகில இந்திய அளவில் மார்ச் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறும் தொழிற்சங்க ங்களின் பொது வேலை நிறுத்தத்திற்குத் திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் ஈட்டும் எல்ஐசி போன்ற அரசுத் துறைகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பினை எதிர்ப்பது உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த த்திற்குத் திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கி றது. திராவிடர் கழக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.