tamilnadu

img

‘உறுதியான கம்யூனிஸ்ட், அச்சமற்ற போராளி’

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஒரு உறுதியான கம்யூனிஸ்ட் என்றும் அச்சமற்ற போராளி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். உழைக்கும் மக்களுக்காகவும், சுரண்டலற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் கோடியேரி இடையறாது போராடினார். எனது நீண்டகாலத் தோழர். அவரது அன்பான பாங்கும், பாரபட்சமற்ற அணுகுமுறையும் பல சிரமங்களைத் தாண்டியதில் முக்கியப் பங்காற்றியதாக தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான பிளவுகள் மற்றும் வகுப்புவாதங்களுக்கு எதிராக சமரசமின்றி போராடிய கோடியேரியின் மறைவுக்கு யெச்சூரி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.