சென்னை, நவ.8- அகவிலைப்படி உயர்வை வழங்காமல் ஓய்வூதியர்களிடமிருந்து மாதம் 14 கோடி ரூபாயை அரசு பறித்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செய லாளர் கே.கர்சன் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி அக விலைப்படியை வழங்கக் கோரி சென்னை யில் மாநகர போக்குவரத்து கழக தலைமை யகமான பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 119 விழுக்காடு அகவிலைப்படி வழங் கப்பட்டது. தற்போது 203 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வை ஓய்வூதி யர்களுக்கு வழங்கவில்லை. அதாவது மாதம் 14 கோடி ரூபாயை பறித்து வரு கிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவ்வப்போது உயரும் அகவிலைப்படியை தொடர்ந்து வழங்க வேண்டும். அதற்கேற்ப விதிகளை திருத்தம் செய்யவும் உத்தரவிட்டது. அதனை நிர்வாகம் அமல்படுத்தவில்லை.
இதன்பேரில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை வழங்கவும், அதுதொடர்பான அறிக்கை யில் நவம்பர் 25-ஆம் தேதி சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. ஆனாலும், நிர்வாகம் அக விலைப்படியை வழங்கவில்லை. எனவே, தலைமை செயலாளரை சந்தித்து முறையிட்டோம். துறைச்செயலா ளருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். அதன்படி நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நவம்பர் 25-ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்திற்கு மாநகர போக்குவரத்து கழக நல அமைப்பின் தலைவர் எம்.நீல மேகம் தலைமை தாங்கினார். நல அமைப் பின் மாநில துணைத்தலைவர் ஏ.ரைமண்ட் தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஏ.வரதராஜன், நிர்வாகிகள் எம்.சண்முகம், ராமானுஜபிரசாத், பிரம்மநாயகம், வீரராக வன், முருகேசன், தாமோதரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், சிஐடியு மூத்த தலைவர் எஸ்.அப்பனு உள்ளிட்டோர் பேசி னர்.