tamilnadu

எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமா? ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு செல்லாது!

எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமா? ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு செல்லாது!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே  நெரூர் பகுதியில் உள்ள சதாசிவ பிரம் மேந்திரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலை யில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்ச ணம் செய்து வந்தனர். இந்த நடை முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை  நடைபெறாமல் இருந்து வந்த நிலையில்  எச்சில் இலைகளின் மீது அங்கப்பிர தட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு  அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி  கரூர் நவீன்குமார் என்பவர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன், இந்த எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு  மே 17 அன்று தீர்ப்பு அளித்தார். இதை யடுத்து, உடனடியாக மே 18 அன்றே, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கப்பிர தட்சணம் செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  மனிதர்களை இழிவு செய்யும்  இந்த சடங்குக்கு நீதிமன்றம் துணை போவதா என விமர்சனங்கள் எழுந்தன.

எச்சில் இலையில் அங்கப் பிரதட்ச ணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தர வுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. 2015 முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிர தட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற நிலையில் பழைய உத்தரவுகளை மறைத்து, தங்க ளுக்கு சாதகமான உத்தரவை பெற்று விட்டனர் என அரசு தரப்பும் நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது. அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத்  தலைவரும், இந்த வழக்கில் மேல் முறை யீடு செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி கள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, “பக்தர்கள் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம்” என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தது. எச்சில் இலையில் அங்கப்பிர தட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்து, இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக  நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.