திருப்பூர், மார்ச் 4- தளி பேரூராட்சி துணைத் தலைவராக மலைவாழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தோழரான மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ளது உடுமலை தாலுகாவிற்குட்பட்ட தளி பேரூராட்சி. இங்குள்ள மலைப்பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையான வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதேநேரம், உள்ளா ட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மட்டுமே கடந்த காலங்களில் மறுக்கப் பட்டு வந்தது. இதன்காரணமாக மலைமக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது.
இந்த அவல நிலைக்கு எதிராக கடந்த பல வருடங்களாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங் களை நடத்தி வந்தது. இதன்தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களும் வாக்களிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டது. மேலும், தளி பேரூராட்சியில் மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு என புதியதாக இரண்டு வார்டுகள் ஒதுக்கப் பட்டு அண்மையில் தேர்தல் நடை பெற்றது. இந்த இரண்டு வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
குறிப்பாக, 16 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவரான ஜி. செல்வம் பெருவாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் தளி பேரூராட்சி துணை தலைவராக ஜி.செல்வன் அறிவிக்கப் பட்டிருந்தார். இதனடிப்படையில் வெள்ளியன்று பேரூராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்த முள்ள 17 வாக்குகளில் திமுக கூட்டணி யின் சார்பில் போட்டியிட்ட ஜி.செல்வன் 11 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துச்சாமி 5 வாக்குகள் மட்டுமே பெற்றோர். ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவானது.