திருவண்ணாமலை, மே 21- கார்ப்பரேட் முதலாளிகள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க நடத்தப்படும் நடவடிக்கையே, 2ஆயிரம் ரூபாய் நோட்டுக் களை திரும்பப்பெறும் நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்தார். திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் சிவப்புப் பேரணி நடைபெற்றது. இதன் முடிவில் அண்ணாசிலை அருகே நடை பெற்ற மாமேதை காரல் மார்க்ஸ் 205 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய ஜி.ராமகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ரவி மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உள்ளிட்ட ஆட்சியாளர்கள், மார்க்சியம் குறித்து அஞ்சு கின்றனர். லண்டன் பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், ஆயிரம் ஆண்டுகளில் மிகச் சிறந்த சிந்தனையாளராக மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்டார். முதலாளித்துவ நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து, சிக்கித் திணறிய போது, இந்த பொருளாதாரத்தை சீர மைக்க ஒரே வழி மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை படிப்பது மட்டும் தான் என்று போப்பாண்டவர் கூறினார்” எனக் குறிப்பிட்டார். “உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் நிலவும் சமூக வேறுபாடுகளைப் பற்றி அன்றே மார்க்ஸ் எழுதியுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர், மொழிவாரி மாநிலம் உருவாக்க வேண் டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தது கம்யூனிஸ்ட் கட்சி தான். காங்கிரஸ் ஆட்சியின் போது, சென்னை மாகாணமாக இருந்ததை, தமிழ்நாடு மாநிலம் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தான். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு பின்னால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலுவான அழுத்தம் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
“தமிழகத்தின் நாகை, திருவாரூர் மாவட் டங்களில் சாதிய கொடுமைகள் ஏராளமாக நடை பெற்றன. சாதிய கொடுமைகளின் முது கெலும்பை உடைத்த பெருமை செங்கொடிக்கே உண்டு. அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக் கீடு கோரிக்கை வைத்து பல கட்ட போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைத்தது” என்ற அவர், 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் அறிவிப்பு, கார்ப்பரேட் முதலாளி கள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெள் ளையாக்க நடத்தப்படும் நடவடிக்கையே என் றும் சாடினார். சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார் தலைமையில் நடை பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் ‘மார்க்ஸ் ஏன் கொண்டாடப்பட வேண்டும்’ என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர் .பத்ரி, ‘நம்மில் வாழும் மார்க்ஸ்’ என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் ஆகி யோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப. செல்வன், ஏ. லட்சுமணன், இரா. பாரி, கே. வாசுகி, ந.சேகரன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் எம்.பிரகலநாதன் வரவேற்றார்.
சிவப்புப் பேரணி
முன்னதாக, திருவண்ணாமலை தேரடி தெருவிலிருந்து துவங்கிய சிவப்புப் பேரணி யில் ஏராளமானோர் செஞ்சட்டையுடன் அணி வகுத்து வந்தனர். காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழாவில் மார்க்ஸ் உருவப்படம் வரையும் போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றி தழ் வழங்கப்பட்டது. 1330 திருக்குறளையும் சரளமாக ஒப்பிக்கும் திருவண்ணாமலை அடுத்த கார்ணாம்பூண்டி அரசு பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி இலக்கியா வுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. செல்வன் எழுத்தில் தயாரிக்கப்பட்ட மார்க்ஸ் குறித்த பாடல் குறுந்தகடு வெளியி டப்பட்டது. வைகறை கலை குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக, திரு வண்ணாமலை ஒன்றிய செயலாளர் எஸ். ராம தாஸ் நன்றி கூறினார்.
பொதுமக்கள் மனு
திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமத்தில் உள்ள இயற்கை வளம் மிக்க மலை யடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டும் செயலை தடுக்க உதவிட வேண்டும் என ஜி.ராம கிருஷ்ணனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் பேசிய ராம கிருஷ்ணன் இந்த கோரிக்கையை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரி வித்தார்.