tamilnadu

img

பழங்குடிகளை வஞ்சிக்கும் பாஜக அரசு: சென்னையில் ஆவேசப் போராட்டம்

சென்னை, ஜூன் 14- பழங்குடி மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  புதனன்று (ஜூன் 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1956 வரைக்கும் யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், 1972 இல் தனி மாநில அந்தஸ்துடன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘சி’ பிரிவு மாநிலமானது. நமது அரசியல் சாசனத்தின் 6வது அட்டவணைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பழங்குடியி னர் அல்லாதவர் மலை, காடுகளில் நிலத்தை வாங்கினால் சட்டப்படி செல்லாது. மொத்தம் 16 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாநிலத்தின் மக்கள்  தொகை சுமார் 25 லட்சம்.  மொத்த பரப்பளவில் 90 விழுக்காடு மலைகள். 10 மலை மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களின் தெற்கு பகுதியில் குக்கிகள், குகி, குக்கி என்ற பழங்குடி  இன மக்களும் வடக்கில் நாகர்கள்  என்று அழைக்கப்படும் நாகா பிரிவு  பழங்குடியினமும் பெரும்பான்மை யாக வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 31 பிரிவுகளைக் கொண்ட பழங்குடி மக்கள் தொகையின் விகிதாச்சாரம் 40 விழுக்காடும். ஆறு பள்ளத்தாக்கு (சமவெளி) மாவட்டங்களில் பழங்குடிகள் அல்லாத ‘மெய்டெய்’சமூகத்தைச் சேர்ந்தவர் கள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக  வசிக்கின்றனர். இந்த மெய்டெய் மக்க ளில் பெரும்பான்மையினர் இந்துக்கள். நிலப்பரப்பில் 90 விழுக்காடுகளைக் கொண்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் பல்லாண்டு காலமாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருவது பாஜகவின் கண்களை  உருத்தி கொண்டிருந்தது. மதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டு வரும் பாஜக தனது ‘இந்துத்துவா’ கொள்கையை மாநில முதல்வர் பைரன் சிங் துணையோடு மெய்டெய்  மக்களின் நெஞ்சங்களில் மத துவே சத்தை விதைத்தது. மத உணர்வை ஊட்டி வளர்த்தது.

இதனிடையே, ஒன்றிய பாஜக அரசு வன பாதுகாப்பு  திருத்த மசோ தாவை கொண்டு வந்தது. இது வனங்க ளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் கூடியதாகும். இந்தப்  பின்னணியில்,  மணிப்பூரில் பழங்குடி யினர் அல்லாத மெய்டெய் மக்களை பழங்குடி பட்டியலில் கொண்டு வரு வதற்கான முயற்சியை பாஜக அரசு செய்தது. உண்மையிலேயே அந்த  மக்கள் பழங்குடியினர் பட்டியலில்  இணைப்பதற்கான தகுதியே இல்லா தவர்கள். அந்த  சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால் மணிப்பூரில் உள்ள அனைத்து மக்களும் பழங்குடி மக்களாக மாறிவிடுவார்கள். ஆனால் உண்மையான பழங்குடி மக்கள் தங்கள் பூர்வீக சொந்த குடியிருப்புகளையும் நிலத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை பூமியாக மணிப்பூர் பற்றி  எரிந்து கொண்டிருக்கிறது. இணைய  சேவைகளை உட்பட அனைத்து  தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 

நம்ம ஊரில் இருந்து ஏறத்தாழ 3000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது மணிப்பூர். இந்த மாநிலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறை கலவரம் எதுவும் நம்மை எந்த வகையிலும் பாதிக்காது என்று எளிதில் கடந்து செல்ல முடியாது. காரணம், சாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்வது பாஜக வின் அடிப்படை கொள்கை. அந்த  கட்சி ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தால் என்ன நடக்கும் என்ப தற்கு மணிப்பூர் சம்பவம் ஓர் எடுத்துக் காட்டாகும். அரசியல் சாசனத்தை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மணிப்பூர் மாநில பாஜக அரசையும் முதலமைச்சரின் கையாலாக தனத்தை யும் கண்டித்தும் மீண்டும் அமைதியை நிலை நாட்டி இரு தரப்பு மக்களும் சகோதரத்துடன் வாழ்வதற்கு உரிய தீர்வு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ஆ.பொன்னுசாமி, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தமிழரசன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முரு கேசன், ராணிப்பேட்டை மாவட்டச் செய லாளர் குமார், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இரா.சரவணன், அகில  இந்திய ஆதிவாசிகள் உரிமைக ளுக்கான தேசிய மேடை மத்தியக் குழு  உறுப்பினர் ஏ.வி.சண்முகம், வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இ.கெங்காதுரை, விவசாயிகள் சங்கத் தின் வடசென்னை மாவட்டச் செயலா ளர் முருகன் ஆகியோர் பேசினர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது, “மணிப்பூர் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சுமூக நிலை ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் பழங்குடியின மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடு படுவோம்” என்றார்.