மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று மாலை தஞ்சாவூரில் மாபெரும் அரசியல் விளக்க - நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் ரூ.23லட்சம் நிதியை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் வழங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் சாமி. நடராஜன் மற்றும் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். (செய்தி : 3)