tamilnadu

img

புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி

புதுச்சேரி,மார்ச் 29- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள்விரோத கொள்கை களை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர்,விவசாயிகள் விரோத கொள்கை களைகண்டித்து சிஐடியு,ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ்வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக, காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தை கள், தமுமுக ஆகிய அரசியல் கட்சி களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

கடைகள் அடைப்பு

தொழிற்சங்கங்களின் போராட்டத்தி ற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் செவ்வாய்கிழமை (மார்ச் 29) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரி நகரத்தில் உள்ள காந்தி வீதி,நேருவீதி, அண்ணாசாலை, காமரா ஜர்சாலையில் இயங்ககூடிய வர்த்தக நிறுவனங்கள்,கடைகள்,திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.

வெறிச்சோடிய சாலைகள்

புதுச்சேரியில் அதிகமாக இயங்க கூடிய தனியார்பேருந்துகள், ஆட்டோ, டேம்போ, மினிகேரியர் உள்ளிட்ட வாக னங்கள் முற்றிலும் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தினால் தனியார்பள்ளிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசுப்பள்ளிகள் திறந்திருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வரத்து குறைவாக இருந்தது. வேலை நிறுத்த போராட்டத்திற்கு  அரசு ஊழியர் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்தி ருந்த நிலையில் தலைமை செயல கத்தை தவிர மற்ற துறைகளில் ஊழி யர்கள் வருகையும் குறைவாக இருந்தது.

மறியல் போராட்டம்

முழு அடைப்பு போராட்டத்தை யொட்டி புதுச்சேரி காமராஜர்சிலை எதிரே தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் மிகுந்த எழுச்சி யுடன் நடைபெற்றது. சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன்,செயலாளர் சீனி வாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வா கிகள் இராமசாமி, மதிவாணன் ,கொளஞ் சியப்பன், மது,ராஜ்குமார், பச்சைமூத்து, தினேஷ்குமார், ீரமணி கண்டன்,வடிவேலு,விஐயகுமார் ஏஐடியூசி மாநில நிர்வாகிள் சரளா, சுப்பையா உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதா னார்கள்.முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜா ங்கம்,சிபிஐ எம்எல் கட்சியின் மாநில தலைவர் பாலசுப்புரமணியன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.

12 மையங்களில் மறியல்

 அண்ணாசிலை, புதிய பேருந்து நிலையம், அஜந்தா சிக்னல், இந்தியாராகாந்தி சதுக்கம், மதகடிப்பட்டு, வில்லியனூர், திருக்கனூர், பாகூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மையங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில்