சென்னை, நவ. 13- தீண்டாமைக்கு எதிராக கருத்தியல் நீதியான பிரச்சாரத்தை முன்னெடுப்போம் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வர வேற்புக் குழு கூட்டத்தில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் ஜனவரி 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்புக் குழு கூட்டம் வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார் தலைமையில் பெரம்பூரில் சனிக்கிழமை (நவ. 12) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் பேசுகையில், தமிழ கத்தில் மிக வேகமாக சாதி ரீதியான அணி திரட்டல் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. தொழிலாளர்கள் தொழி லாளி வர்க்கம் என்ற அடிப்படையில் திரள்வதற்கு பதிலாக சாதி ரீதியாக திரளும் சூழல் உருவாகியுள்ளது. தீண்டாமை கொடுமை, ஆணவப் படுகொலை போன்ற வழக்குகளை பதிவு செய்வதற்கு காவல் துறை யினரிடையே பெரும் தயக்கம் உள்ளது. நீண்ட நெடிய போராட்டத் திற்கு பிறகே வழக்கு பதியப்படுகிறது. சாதிய, மத மோதலை உருவாக்கி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் மக்களைப் பிளவுபடுத்தி வருகி றார்கள்.
மதுரையில் கருத்தரங்கம்
எனவே இதற்கு எதிரான விழிப்பு ணர்வு பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அதனடிப் படையில்தான் இந்த மாநாட்டை யொட்டி மலக்குழியில் இறங்கி விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை திரட்டி மதுரையில் கருத்தரங்கமும், சாதி மறுப்பு திருமணம் செய்த 100 தம்பதிகளுக்கு மயிலாடுதுறையில் பாராட்டு கூட்டமும், தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களை கூட்டி விழுப்புரத்தில் கூட்டமும், “பறிபோகும் இட ஒதுக் கீடு” என்ற தலைப்பில் நாமக்கல்லில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
சாதி மறுப்பாளர்கள் சங்கமம்
அதேபோல் ஜனவரி 4ஆம் தேதி “சாதி மறுப்பாளர்கள் சங்கமம்” பொது க்கூட்டம் பெரம்பூரில் நடைபெற உள்ளது. மேலும் மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் பல லட்சக் கணக்கான மக்களை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார். கருத்தியல் ரீதியான பிரச்சாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் பேசுகையில், கிராமப் புறங்களில் தீண்டமை பல வடி வங்களில் உள்ளது. அதேபோல் சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு விடுவதில் சாதிய பாகு பாடு உள்ளது. சனாதன சக்திகளின் பின்னால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்கள் திரண்டு கொண்டிருக் கிறார்கள்.
காவல் நிலைய படுகொலைகளில் பெரிதும் பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். போதைப் பொருட் களுக்கு அடிமையாவதும் தலித் பிற்படு த்தப்பட்ட மக்கள் தான். இவை திட்டமிட்டு செய்யப்படுகிறது. எனவே கருத்தியல் ரீதியான பிரச்சாரத்தையும், ஆட்சியாளர்களின் சூழ்ச்சியையும் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை நம்முன் உள்ளது என்றார். வடசென்னை மாவட்டச் செய லாளர் வி.ஜானகிராமன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ெஜயராமன் ஆகி யோரும் பேசினர். தலைவராக எஸ்.கே.மகேந்திரன், செயலாளராக வி.ஜானகிராமன், பொரு ளாளராக வீ.ஆனந்தன் உள்ளிட்ட 50 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக் கப்பட்டது. இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், தமுஎகச மாவட்டச் செயலாளர் மணி நாத், மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பாக்கியலட்சுமி, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நித்தி யராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.