சென்னை, ஜூலை 30 - தற்காலிக ஆசிரியர் நியமனத் எதிர்த்து மாநகராட்சி மன்ற கூட்டத் திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பள்ளிகளில் 168 இடை நிலை ஆசிரியர்கள், 138 பட்டதாரி ஆசிரியர்கள், 147 முது நிலை பட்டதாரி ஆசிரியர் என 453 ஆசிரியர் பணியிடங்களை தற்காலி மாக 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் நியமிக்கவும், கணினி ஆசிரியர்கள், இளநிலை உதவி யாளர், கணினி உதவியாளர், பாதுகாவ லர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர் என 574 பணியிடங்களையும் தற்கா லிக அடிப்படையில் நியமிக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாந கராட்சி மன்றக் குழுத் தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் சிபிஎம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெய ராமன் கூறியதாவது:
பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாக தற்காலிக ஊதிய அடைப் படையில் ஆசிரியர்களை நிய மித்துக்கொள்ள மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அர சாணை 231/2010ன் படி 30 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். ஒரு ஆசிரியர் நிய மனம் செய்ய வேண்டும். இதன்படி தேவையான ஆசிரியர் பணியிடங்க ளில் 50 விழுக்காட்டை மட்டும் நிரப்பு கின்றனர். அடுத்த 50 விழுக்காடு எப்போது நிரப்பப்படும்? மாணவர்களின் கல்வி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதாக கூறுகின்றனர். அவ்வாறெனில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் யாரை வேண்டுமானாலும் நியமனம் செய்ய லாம் என்றால் அதில் அரசியல் தலை யீடு இருக்கும். 2014ல் அதிமுக கொண்டு வந்த அதே திட்டத்தை திமுக கொண்டு வருவதை ஏற்க முடியாது. கடந்த 7 ஆண்டுகளாக பணி யாற்றி வருகிறவர்களுக்கும் அதே ஊதி யம் வழங்கப்படும் என்று கூறுவதை யும் ஏற்க முடியாது. கடைநிலையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப் படுகிறது. இடைநிலை ஆசிரியர்க ளுக்கு 10 ஆயிரம் ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது பொருதமானது அல்ல. எனவே, ஆசிரியர் தகுதி தேர் வில் வெற்றிபெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
மழைநீர் வடிகால்வாய்
மாநகரம் முழுவதும் மழை நீர் வடிகால்வாய் பணிகள் நடைபெறு கிறது. ஒவ்வொரு தெருவிலும் பள்ளம் தோண்டி, பணியை பாதியில் விட்டு விடுகிறார்கள். கால்வாய்களை இணை க்காமல் உள்ளனர். இதனால் தண்ணீர் தேங்கி நின்று கொசு உற்பத்தியா கிறது. மலேரியா, டெங்கு பரவுகிறது. அதிகாரிகள் முறையாக பராமரிப்ப தில்லை. ஒப்பந்ததாரர்கள் கவுன்சிலர் களை மதிப்பதில்லை. இது குறித்து கடந்த கூட்டத்திலேயே கேள்வி எழுப்பியபோது, பணிகள் துரிதமாக முடிக்கப்படும் என்று மேயர் கூறினார். அதன்படி பணிகள் நடை பெறவில்லை. ஓராண்டுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை என்றோம். குறைந்தபட்சம் தெருவுக்கு 2 விளக்காவது எரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த பணியும் நடக்கவில்லை. ஸ்டீபன்சன் சாலை பாலப் பணிக்காக 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவற்றை யெல்லாம் வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தோம். கவுன்சிலர்களோடு அதிகாரிகள் ஒத்துழைக்காததால் பணிகள் நடை பெறாமல் உள்ளது. தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்வதே இல்லை. இதனால் ஒப்பந்த தார்கள் விருப்பத்திற்கு செயல்படு கின்றனர். வட்டத்தில் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்ற தகவலை கவுன்சிலர்களுக்கு அதி காரிகள் தருவதில்லை. தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாறாக, அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது. இதனால் மக்கள் பிரதிநிதிகளால் முழு மையாக செயலாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்த ஆர்.ஜெயராமன் நேர மில்லா நேரத்தில் பேசினார். அதற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப கடிதம் எழுதி யுள்ளோம். அது காலதாமதம் ஆவ தால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக ஆசிரி யர்களை நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.
அதிமுக வெளிநடப்பு
சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி யதும் மாமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.