பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்து வெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராக குறிக்கப்பட்டுள்ளது. கொல்லக்கூடிய காளை யைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் கூறப்படு கிறது. இதிலிருந்து பொ.ஊ.மு. 2000 ஆண்டுகளில் ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்கின்றனர் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள். பொது ஊழிக்கு முற்பட்ட ஆண்டுகள் பொது ஊழிக்கு முன் (பொ.ஊ.மு.) என வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கி.மு. 500 என்பது பொது ஊழிச் சொல்லாட லில் “பொ.ஊ.மு. 500” அல்லது “500 பொ.ஊ.மு.” என்கிறது. இது “பொது ஆண்டுக்குப் முன்” (பொ.மு.) என்றும் “பொது ஆண்டுக்கு முன்” (பொ.ஆ.மு.) என்றும் “பொதுக் காலத்திற்கு முன்” (பொ.கா.மு.) என்றும் அழைக்கப்படுகிறது.
பொது ஊழி அல்லது பொதுவருடம் என்பது நடுநிலை விரும்பும் பல ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களால் ஏற்றுக் க்கொள்ளப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் “ஜல்லிக் கட்டு” நடைபெற்று வந்ததை சித்தரிக்கும் முத்தி ரை மொஹஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப் பட்டது. இது சுமார் 4,000 ஆண்டுகள் பழமை யானது. இது புதுதில்லி தேசிய அருங்காட்சி யகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மொஹஞ்சதா ரோவில் காணப்படும் முத்திரை, ஒரு மனிதனையோ அல்லது பல ஆண்களையோ தாக்கும் வளைந்த கொம்புகளுடன் ஒரு காளையைக் சித்தரித்துள்ளது. அதன் கொம்புகள் காளையின் வேகம் ஆகியவை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த காளை திடீரென தனது கழுத்தை பக்கவாட்டாகத் திருப்பி, தங்களை விரட்டி வந்தவர்களை தூக்கி வீசிவிட்டு, காளையின் கழுத்து அதன் பழைய நிலைக்கு வந்ததையும் குறிப்பிடுகிறது.
ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் எனக் கூறப்படுகிறது. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இனப் பெண்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையைக் கைவிடச் செய்வதற்காகவே புதிய பழக்க மாக ‘சல்லிக் காசு’ என்னும் நாணயங் களை துணியில் வைத்து மாட்டின் கொம்பு களில் கட்டிவிடப்படும் பழக்கம் அறிமுகப் படுத்தப்பட்டது. சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கமும் வழக்கத்தில் இருந்துள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசை’ துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது. வேலி ஜல்லிக்கட்டு: வேலி மஞ்சு விரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டு வதும் நடைபெறுகிறது.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு:
அலங்கா நல்லூர் போன்ற ஊர்களில் வாடிவாசல் வழி யாக வெளியேறும் காளைகளை இளை ஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம்செல்கின்றனர். வடம் ஜல்லிக்கட்டு: வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், இருபது அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள். மஞ்சு விரட்டு: மஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையாட்டு. “மஞ்சி” என்பது தாழை வகை கற்றாலை நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும். “மஞ்சி கயிற்றால்” மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகிய வற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டிச் சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும். பிற்காலத்தில் “மஞ்சி” என்ற சொல் மருவி “மஞ்சு விரட்டு” ஆனது.
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து சுமார் 40 கிமீ தொலை வில் அமைந்துள்ளது கரிக்கியூர். இங்கு 500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் நிறைந்த பாறை மேற்பரப்பு தளம் இருந்தது. இந்தப் பாறை 3,500 ஆண்டுகள் பழமையானது. இந்த பாறை ஓவியம் 2004-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கண்டறிந்த வர்கள் கலை வரலாற்றாசிரியர் கே.டி. காந்திராஜன், பேராசிரியர் ஜி.சந்திரசேகரன் ஆகியோர். கரிக்கியூரில் உள்ள ஒரு பெரிய பாறை யின் மேற்பரப்பில் உள்ள ஓவியங்கள் வெள்ளை சிவப்புக் காவி நிறத்தில் வரையப்பட்டுள்ளது, அந்த ஓவியம் ஆண்கள் காளைகளைத் துரத்துவதைக் காட்டுகிறது. காளைகள் நீண்ட பெரிய நேராக வளர்ந்த கொம்புகளுடன் இருந்துள்ளன. குறிப்பாக மூன்று காளைகளை பல மனிதர்கள் துரத்து வது தென்படுகிறது. இந்தக் காளை ஓவி யங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டி ருந்தன. பின்னர் சிவப்பு காவி நிறத்தில் வரை யப்பட்டுள்ளன. கரிக்கியூர் ஓவியங்கள் கி.மு.1500- கி.மு.2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
மதுரை - கல்லூத்து மேட்டுப்பட்டி
மதுரை-திண்டுக்கல் இடையே மதுரைக்கு மேற்கே 35 கிமீ தொலைவில் உள்ள கல்லூத்து மேட்டுப்பட்டியில் உள்ள குகையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு ஒற்றை ஓவியம், காளையை அடக்க முயன்ற ஒரு தனிமனிதனைக் காட்டுகிறது. வெள்ளைக் கயோலினில் செய்யப்பட்ட இந்த ஓவியம் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிட்டுள்ளார் கலை வரலாற்றாசிரியர் கே.டி.காந்திராஜன்.
சேலம் - பெத்தநாயக்கன்பாளையம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பெத்த நாயக்கன்பாளையத்தில் 1976-ஆம் ஆண்டு ஆறடி நீளமுள்ள கல் கண்டெடுக்கப் பட்டது. சேலம் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கல்லில், காளையை அடக்கும் ஒருவர் அதன் கொம்பில் இருந்து பரிசை பறிக்க முயலும் காட்சி இடம் பெற்றுள் ளது. அதில் செதுக்கப்பட்ட வார்த்தைகள் குறித்து கல்வெட்டியல் துறை அறிஞரும் கையெழுத்து அறிஞருமான என்.குமாரசாமி கூறியிருப்பதாவது: ‘கோவூர் கங்கன் கருவந்துறையிலே, எருது விளையாடி பட்டான். கங்கன் மகன் பெரிய பயல் நட்ட கல்லு’ அதாவது கோவூர் கிராமத்தைச் சேர்ந்த கங்கன் கருவந்துறை யில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விளையாட்டில் பங்கேற்று வீரமரணம் அடைந்தார்”. எனத் தெரிவித்துள்ளார். வரலாற்று பெருமைமிக்க ஜல்லிக்கட்டு இந்தாண்டு ஜன.15-ஆம் தேதி அவனியா புரத்திலும், ஜன.16-ஆம் தேதி பாலமேட்டி லும், ஜன.17-ஆம் தேதி அலங்காநல்லூரி லும் நடைபெறுகிறது.