tamilnadu

img

இளைஞர்களுக்கு கட்டணமில்லா கோடிங் பயிற்சி

சென்னை, அக்.12- தமிழ்நாடு இளைஞர்களுக்கு கட்டணமின்றி கோடிங் பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-ன் தொழில் ஊக்குவிப்பு நிறுவ னமான குவி, ‘நான் முதல்வன்-தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்’ கைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சென்னை ஐஐடி, ஐஐஎம் அகம தாபாத் ஆகியவற்றின் தொழில் ஊக்கு விப்பு நிறுவனமான குவி தமிழ் நாட்டில் ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஹேக்கத்தான்கள் மூலம் பயிற்சி  அளிக்கும் திட்டத்தை முன்னெடுத் துள்ளது. ‘நான் முதல்வன்- தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக் என்றழைக் கப்படும் இந்த முயற்சிக்காக, தமிழ் நாடு அரசின் நான் முதல்வன் திட்டம்,  அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றோடு இந்நிறுவனம் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

என்எம்-டிஎன்சிபிஎல் எனப்படும் இத்திட்டத்தின் மூலம் மூன்று நாட்க ளுக்கு தொடர்ச்சியாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஹேக்கத்தான்கள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் ஆர்வ முள்ள பொறியியல் மாணவர்கள் தங்களின் கோடிங் திறமையை வெளிப்படுத்துவது, மதிப்புமிக்க வாய்ப்புகளைப் பெறலாம் இலவச மாகக் கிடைக்கும் தளமாக இருக்கும். இந்த தொடர் ஹேக்கத்தான் மூலம், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை களின் சிக்கலான அறிக்கைகளுக்கு தீர்வு காணவும், அவற்றைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கவும் மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். முன்னோடியான இந்த முன்முயற் சியை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சமீபத்தில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். ஆர்வமுள்ள பொறியியல் கல்லூரி  மாணவர்கள் எந்த பகுதியில் இருந்தும் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.